12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.18,000/- ஊதியத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு !
Project Research Assistant, Data Entry Operator பணியிடங்களை நிரப்ப பழங்குடியின ஆரோக்கியத்திற்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICMR-NIRTH) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு 15.03.2022 வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை தவற விடாமல் உடேன விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
Project Research Assistant, Data Entry Operator பணிகளுக்கென தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தமாக 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. Project Research Assistant பதவிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Science அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் விண்ணப்பதாரர்கள் Anthropology / Social Science / Psychology / Statistics / Biostatistics பாடப்பிரிவில் Master’s degree அல்லது பணிக்கு தொடர்புடைய துறையில் குறைந்தது 3 வருட அனுபவம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
Data Entry Operator பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் Mathematics பாடத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் EDP பணிகளில் PSU அல்லது அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் குறைந்தது 2 வருட அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் Computer Applications / IT / Computer Science பாடத்தில் Bachelor’s டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
Project Research Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். Data Entry Operator பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். Project Research Assistant பணிக்கு ரூ.31,000/- , Data Entry Operator பணிக்கு ரூ.18,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்கள் மட்டும் ஆன்லைன் நேர்முக தேர்வின் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணல் குறித்த தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15.03.2022 அன்று மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.