நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி நடிகை – ரசிகர்கள் குஷி!
சின்னத்திரை நடிகையாகவும், செய்திவாசிப்பாளராகவும் மக்கள் மத்தியில் பிரபலமான சரண்யா துராடி கடந்த சில மாதங்களாகவே சின்னத்திரையில் வலம் வராமல் இருந்தார். தற்போது இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சரண்யா துராடி :
தமிழில் பிரபலமான செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் மாஸ் காட்டும் நடிகைகளில் ஒருவர் தான் சரண்யா துராடி. இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்தில் 2012ம் ஆண்டு நடித்தார். அதனைத் தொடர்ந்து சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்திலும் நடித்தார். ஆனாலும் இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு வெற்றியை பெற்று கொடுக்கவில்லை.
TN Job “FB Group” Join Now
அதன் பிறகு சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தவராக முதலில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் நடித்து மக்களிடத்தில் அறிமுகமானார். இந்த தொடர் சரண்யாவுக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது என்றே சொல்லலாம். அதன் பிறகு தமிழிலிருந்து தெலுங்குக்கு தாவி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலின் தெலுங்கு வெர்ஷனில் நடித்து அசத்தினார். இதையடுத்து வரிசையாக சேனல் விட்டு சேனல் மாரி பல சீரியலில் நடித்து வந்த சரண்யா, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஒருவர் ஆனார்.
ஒரே மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்த பாரதி & கண்ணம்மா – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
இறுதியாக விஜய் டிவியில் டிஆர்பி சரியாக இல்லை என்ற காரணத்தால் நிறுத்தப்பட சீரியலில் ஒன்றான ‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற சீரியலிலும் நடித்து, அதன் பிறகு சின்னத்திரை பக்கத்துக்கு காணாமல் போனார். இதனால் கவலையில் இருந்த அவரது ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் கொடுக்கும் வகையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரவிருக்கும் புது சீரியலில் மீண்டும் சின்னத்திரையில் மாஸ் என்ட்ரி கொடுக்கப்போவதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.