தமிழக அரசு போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் பேருந்துகளை இயக்கி வரும் ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் இல்லை என போக்குவரத்துத்துறை விளக்கமளித்துள்ளது.
தடுப்பூசி கட்டாயம்:
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அமலில் உள்ளது. அதன்படி நடைமுறையில் உள்ள இரவுநேர ஊரடங்கு காரணமாக இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளில் பயணம் செய்யும் மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை போன்ற மாநகரங்களில் 800க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
TN Job “FB Group” Join Now
அதில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என 2000க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்து வருகின்றனர். தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் பொதுப்போக்குவரத்தில் மக்களுடன் அதிகமாக செலவிடும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என போக்குவரத்துத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பு போக்குவரத்து பணியாளர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான விமான சேவைகள் – ஏப்ரல் 24 முதல் ரத்து!!
இது குறித்து போக்குவரத்துத்துறை செயலாளர் சமயமூர்த்தி கூறுகையில், ‘தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமலில் இருப்பதால் அரசுக்கு 12 கோடி ரூபாய் முதல் 15 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் அரசு அறிவித்தபடி நேற்று பகலில் 16 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் பணியில் இருக்கும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து ஓட்டுநர்கள், நடத்துநர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை’ என தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி கட்டாயப்படுத்த பட வேண்டும்.ஏன் என்றால், அவர்கள் தினமும் ஆயிரக்கணக்காக மக்களிடம் தொடர்பில் இருக்கிறார்கள். தடுப்பூசி போட்டு கொள்வது மிகவும் பாதுகாப்பானது.