ஏப்ரல் 4ம் தேதி வரை பள்ளிகள் விடுமுறை – மாநில அரசு உத்தரவு!!!

0
ஏப்ரல் 4ம் தேதி வரை பள்ளிகள் விடுமுறை - மாநில அரசு உத்தரவு!!!
ஏப்ரல் 4ம் தேதி வரை பள்ளிகள் விடுமுறை - மாநில அரசு உத்தரவு!!!ஏப்ரல் 4ம் தேதி வரை பள்ளிகள் விடுமுறை - மாநில அரசு உத்தரவு!!!
ஏப்ரல் 4ம் தேதி வரை பள்ளிகள் விடுமுறை – மாநில அரசு உத்தரவு!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ள நிலையில் பள்ளிகளை ஏப்ரல் 4ம் தேதி வரை மூடுவதற்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல்:

நாடு முழுவதும் கொரோனா பரவலின் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு கடந்த 2020 மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. மாணவர்களுக்கான பாடங்கள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் டிசம்பர் மாதத்தில் சற்று குறையத்தொடங்கியது.

எம்.பி.ஏ.,வில் 5 ஆண்டு புதிய பாடப்பிரிவு – காமராசர் பல்கலை துணைவேந்தர் ஒப்புதல்!!

பள்ளிகள் திறப்பு:

கொரோனா பரவல் தாக்கம் குறைந்த காரணத்தால் மாநில அரசுகள் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்தது. உத்தரபிரதேசத்தில் இதனால் பிப்ரவரி மாதத்தில் இருந்து பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தப்பட்டனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை மிகவும் வேகமாக பரவி வந்தது.

TN Job “FB  Group” Join Now

பள்ளிகள் மூடல்:

கொரோனா இரண்டாம் அலை பரவலின் காரணமாக மாணவர்கள் பாதிக்கும் சூழல் உருவாக்கி விடக்கூடாது என்ற நோக்கில் உத்தரபிரதேச அரசு மாநிலத்தில் உள்ள எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளித்து உத்தரவிட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் இப்பொழுதும் மிகவும் தீவிரமடைந்து இருப்பதால் பள்ளிகள் ஏப்ரல் 4ம் தேதி வரை மூடுவதற்கு உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்தும் ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!