மாஸ்க் அணியாவிட்டால் ரூ.10,000 அபராதம் – மாநில முதல்வர் அதிரடி உத்தரவு!!!
உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.10,000 அபராதமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்படுள்ளது.
அதிகபட்ச தொற்று:
கொரோனா தொற்றின் முதல் அலையின் போது அதிகபட்ச பரவல் ஒரு சில மாநிலங்களில் மிக அதிகமாக இருந்தது. அதில், மஹாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்கள் முன்னிலையில் இருந்தது. தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவலின் தாக்கமும் உத்தரபிரதேசத்தில் அதிக அளவில் பதிவாகியுள்ளது. இதனால் மாநிலத்தில் இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.
ஜேஇஇ 2021 தேர்வுகள் ஒத்திவைக்க கோரிக்கை – கொரோனா பாதிப்பு எதிரொலி!!!
பள்ளிகள் மூடல்:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னதாக பள்ளிகள் அனைத்தும் மே 15ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த 10 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அபராதம்:
லக்னோ, வாரணாசி, பிரயாக்ராஜ் போன்ற நகரங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. உ.பி.,யில் நேற்று ஒரே நாளில் 20,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் முகக்கவசம் அணியாமல் உள்ளவர்களுக்கு முதல் முறை ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் முறை முகக்கவசம் அணியாமல் பிடிக்கப்படுபவர்கள் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டி இருக்கும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்