ஜேஇஇ 2021 தேர்வுகள் ஒத்திவைக்க கோரிக்கை – கொரோனா பாதிப்பு எதிரொலி!!!
நாட்டில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தால் 2021 ம் ஆண்டுக்கான ஏப்ரல் மற்றும் மே மாத ஜேஇஇ தேர்வுகளை தள்ளி வைக்க பலதரப்புகளில் இருந்தும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் அவர்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.
கொரோனா தொற்று:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக வேகத்தில் பரவி வருகிறது. இதனால் பல மாநிலத்திலும் மற்றும் மத்திய கல்வி வாரியத்தில் பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் மத்திய உயர்நிலைக் கல்வி வாரியத்தின் 2021ம் ஆண்டுக்கான ஏப்ரல் மற்றும் மே மாத ஜேஇஇ தேர்வுகளையும் தள்ளி வைக்க மத்திய கல்வி அமைச்சரிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
வார இறுதி சனி, ஞாயிற்று கிழமைகளில் ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!!
ஜேஇஇ தேர்வுகள்:
ஜேஇஇ தேர்வின் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் மாணவர்கள் ஆண்டு தோறும் மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கப்படுகிறார்கள். வழக்கமாக ஆண்டிற்கு இரண்டு முறை நடக்கும் இந்த தேர்வானது நடப்பு ஆண்டில் இருந்து நான்கு முறை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாத தேர்வுகள் நடந்து முடிந்து விட்ட நிலையில், வரும் ஏப்ரல் மற்றும் மே மாத தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று ட்விட்டரில் கோரிக்கைகள் எழுந்துள்ளது.
தள்ளிவைக்கப்பட்டுள்ள தேர்வுகள்:
நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த மாநிலங்களிலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் 2021ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முதுநிலை நீட் தேர்வு முன்னதாக ஏப்ரல் 18ம் தேதி நடக்க இருப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்