இந்தியாவின் தனி நபர் ஆண்டுக்கு 50 கிலோ உணவை வீணாக்குகிறோம் – ஆய்வு முடிவுகள்!!

0
இந்தியாவின் தனி நபர் ஆண்டுக்கு 50 கிலோ உணவை வீணாக்குகிறோம் - ஆய்வு முடிவுகள்!!
இந்தியாவின் தனி நபர் ஆண்டுக்கு 50 கிலோ உணவை வீணாக்குகிறோம் - ஆய்வு முடிவுகள்!!
இந்தியாவின் தனி நபர் ஆண்டுக்கு 50 கிலோ உணவை வீணாக்குகிறோம் – ஆய்வு முடிவுகள்!!

இந்தியாவில் ஒவ்வொரு தனிநபரும் ஆண்டுதோறும் 50 கிலோ எடையுடைய உணவை வீணாக்குவதாக ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட உணவு கழிவின் 2021 ம் ஆண்டுக்கான அட்டவணை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஐ.நா., சபை ஆய்வு:

உணவு வீணாவது பற்றி ஐநா.சபை நடப்பு ஆண்டுக்கான ஆய்வு ஒன்றை உலகம் முழுவதும் மேற்கொண்டது. உலகளவில் கடந்த ஆண்டு 93.1 கோடி டன் உணவு அல்லது நுகர்வோருக்குக் கிடைக்கும் மொத்த உணவில் 17 சதவீதம் வீடுகள், சில்லறை விற்பனையாளர்கள், உணவகங்கள் மற்றும் பிற இடங்களில் வீணாக்கப்பட்டு உள்ளதாக ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட உணவு கழிவு அட்டவணை அறிக்கை வெளியிட்டது.

சிபிஎஸ்சி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு திருத்தப்பட்ட அட்டவணை — தேர்வு வாரியம் வெளியீடு!!

சுமார் 300 கோடி மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்கமுடியாம தவிக்கின்றனர். ஆண்டுதோறும் பல நூறு பேர் பட்டினியால் சாகும் போது கடந்த 2019ம் ஆண்டில் 93.1 கோடி டன் உணவுப் பொருட்கள் வீணாக்கப்பட்டுள்ளன.2019 ஆம் ஆண்டில் 69 கோடி மக்கள் பசியுடன் இருப்பதாக ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

நிர்வாக இயக்குனர்:

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட நிர்வாக இயக்குனர் இங்கர் ஆண்டர்சன் அவர்கள், ” “உணவு கழிவுகளை குறைப்பது கார்பன் உமிழ்வைக் குறைக்கும், நில மாற்றம் மற்றும் மாசுபாட்டின் மூலம் இயற்கையின் அழிவை மெதுவாக்கும், உணவு கிடைப்பதை மேம்படுத்துகிறது, இதனால் பசி குறைகிறது மற்றும் உலகளாவிய மந்தநிலையின் போது பணத்தை மிச்சப்படுத்தும்” என கூறினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!