ஏர்டெல் பயனர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட் – வரம்பற்ற 5 ஜி டேட்டா சலுகை அறிமுகம்!
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற டேட்டா சலுகையை தற்போது அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
5ஜி டேட்டா:
இந்தியாவில் ஏகப்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அருமையான சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க் பயன்களை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனை ஏர்டெல் பயனர்கள் தற்போதுள்ள டேட்டா திட்டங்களில் எந்தவித கட்டணமும் இல்லாமல் அனுபவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு Airtel 5G வரம்பற்ற டேட்டா தற்போதுள்ள போஸ்ட்பெய்ட் திட்டங்களில் கிடைக்கும். ப்ரீபெய்ட் பயனர்களுக்கு Airtel 5G அன்லிமிடெட் டேட்டா தற்போதைய நிலவரப்படி அனைத்து ஏர்டெல் டேட்டா திட்டங்களிலும் 5ஜி வேகத்தை அனுபவிக்கலாம். இதற்கு வாடிக்கையாளர்கள் 5ஜி சாதனம் மற்றும் 5ஜி நெட்வொர்க் பகுதியில் இருக்க வேண்டும். தற்போது நாடு முழுவதும் ஏர்டெல் 5ஜி 270 க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. விரைவில் தொலைதூர நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு விரிவுபடுத்தும் எனவும், மார்ச் 2024 இறுதிக்குள் ஒவ்வொரு நகரத்தையும் முக்கிய கிராமப்புறங்களிலும் 5G சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.