பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து – அனைத்து மாணவர்களும் தேர்ச்சி
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் பரவி வந்ததனால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. மேலும் தேர்வுகள் யாவும் ரத்து செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தொற்றின் தாக்கம் குறையாததினால் பல்வேறு மாநில அரசுகளும் பல்கலை தேர்வுகளை ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ராஜஸ்தான் மாநிலமும் இதில் இணைந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பயிலும் அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான பல்கலை தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. தொற்றின் பரவலினை கணக்கீடு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து பல்கலை தேர்வுகளையும் ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது.
மேலும் மாணவர்களுக்கு தேர்ச்சி ஆனது கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் தேர்வுகளை ரத்து செய்து வரும் நிலையில் ராஜஸ்தான் மாநிலமும் இந்த பட்டியலில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |