மாணவர்களுக்கான நிலுவை உதவித்தொகை – 1 வாரத்திற்குள் செலுத்திட யுஜிசி முடிவு
ஆராய்ச்சி படிப்பில் பயிலும் மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உதவித்தொகை ஆனது சமீபகாலமாக நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த நிலுவை தொகையினை தற்போது 1 வார வாரத்திற்குள் செலுத்திட பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
மாணவர் உதவித்தொகை !!
தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெறும் ஆராய்ச்சிப் பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் மாதந்தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை ஆனது மாதம் தவறாது சரியாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதற்கொண்டு அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு கிடப்பதால் மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது.
அதனை மாணவர்களுக்கு வழங்கிட தற்போது யுஜிசி முடிவு செய்துள்ளது. மேலும் கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த உதவித்தொகையினை உயர்த்தி வழங்கி வருகிறது. அதாவது இளநிலை ஆய்வாளருக்கு (ஜேஆர்எப்) ரூ.24,800-ல் இருந்து ரூ.31,000/- வரையிலும், மேலும் முதுநிலை ஆய்வாளருக்கு (எஸ்ஆர்எப்) ரூ.27,900-ல் இருந்து ரூ.35,000/- வரையிலும் உதவித்தொகையினை உயர்த்தியுள்ளது.
1 வார கால அவகாசம் !!!!
இரண்டு ஆண்டு காலம் வழங்கப்படும் இந்த உதவித்தொகை இன்னும் வழங்கப்படாத நிலையில் தற்போது யுஜிசி செயலர் ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார். அதில், “உதவித்தொகை தாமதமாக காரணமாக இருந்த தொழில்நுட்பக் கோளாறு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கெனவே அளிக்கப்படாமல் இருந்த உதவித்தொகையுடன் சேர்த்து இந்த மாதத்துக்கான உதவித்தொகையும் வழங்கப்படும். இத்தொகை ஒருவார காலத்துக்குள்ளாக சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும்”, என்று கூறியுள்ளார்.
இதனால் மாணவர்களுக்கு அவர்களின் உதவித்தொகை ஆனது இன்னும் 1 வாரத்திற்குள் அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என அறிந்து கொள்ள முடிகிறது. இந்த தகவலால் மாணவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |