யுஜிசி அனுமதி பெறாத பல்கலை சேர்க்கை ரத்து !!!! – கட்டணங்கள் திரும்ப அளிக்கப்படுமா ?????

0
யுஜிசி அனுமதி பெறாத பல்கலை சேர்க்கை ரத்து
யுஜிசி அனுமதி பெறாத பல்கலை சேர்க்கை ரத்து

யுஜிசி அனுமதி பெறாத பல்கலை சேர்க்கை ரத்து !!!! – கட்டணங்கள் திரும்ப அளிக்கப்படுமா ?????

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் படிப்பிற்கான சேர்க்கையினை யுஜிசி அனுமதி இல்லாமல் நடத்தியதனால் அந்த சேர்க்கையினை ரத்து செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டு உள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு வரை (2017-2018 கல்வியாண்டு) தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு யுஜிசியிடம் அனுமதி பெற வேண்டியது இல்லை. இதனால் பல லட்சம் மாணவர்கள் சேர்க்கை மூலம் பல்கலையில் சேர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பல்கலையில் சேர்க்கை நடத்த யுஜிசியிடம் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதனால் 2018-2019 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு அனுமதி வேண்டி பல்கலை சார்பில் மன்றாடப்பட்டது.

எப்படியும் அனுமதி பெற்றுவிடலாம் என மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனால் அந்த மாணவர் சேர்க்கையினை ரத்து செய்து யுஜிசி உத்தரவு வெளியிட்டது. இதனை பல்கலையின் பதிவாளர் வருத்தத்துடன் வெளியிடுவதாக வெளியிட்டு உள்ளார். மேலும் மாணவர்கள் செலுத்திய கட்டணங்களும் திரும்ப அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!