உயர்கல்வி நிறுவனங்களில் சர்வதேச சிறப்பு மையங்கள் திறக்க வேண்டும் – யுஜிசி அறிக்கை!!
பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ள அறிவிப்பில் புதிய கல்விக்கொள்கையின் படி இந்திய மாணவர்கள் உலகளவில் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான சிறப்பு மையங்களை உயர்கல்வி நிறுவனங்கள் அமைத்து தர வேண்டும் என தெரிவித்துள்ளது.
யுஜிசி அறிவிப்பு:
புதிய கல்விக்கொள்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களின் படி உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்களுக்கு உலகளவில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை அறிய கல்வி நிறுவனம் சார்பில் சிறப்பு மையம் அமைக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
விடைத்தாளை திருத்த மறுத்த ஆசிரியர் பணி நியமனம் ரத்து சரிதான் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!!
இதுகுறித்து யுஜிசி செயலாளர் ரஜினிஷ் ஜெயின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளவை, “இந்திய மாணவர்கள் சர்வதேச அளவில் வேலைவாய்ப்புகள் பெற உயர்கல்வி நிறுவனங்கள் புதிய கல்விக்கொள்கையின் படி வழிவகை செய்ய வேண்டும். எனவே இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் சர்வதேச விவரங்களை அறிய சிறப்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
ஆன்லைன் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – அண்ணா பல்கலை வெளியீடு!!
இந்த மையம் மூலம் வெளிநாட்டில் உள்ள மாணவர் சேர்க்கை நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இந்த பணிக்காக ஏற்கனவே கல்லூரிகளில் பயின்று வெளிநாடுகளில் உள்ள மாணவர்களை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்திய கல்வி நிறுவனங்களில் உள்ள ஆய்வுகள், புதிய படிப்புகளை உலகளவில் கொண்டு சேர்க்க வேண்டும். இதற்கான பணியை அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதிக்குள் முடித்து பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு அனுப்ப வேண்டும்”, இவ்வாறு அதில் கூறிப்பிட்டுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்