சென்னை & மதுரை உயர் நீதிமன்றங்களில் இனி ‘இதற்கு’ தடை – அதிரடி உத்தரவு அமல்!
சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அவர்கள் அதிரடியாக தமிழகத்தின் சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் குறிப்பிட்ட செயலுக்கான தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதிரடி தடை உத்தரவு:
அரசு மற்றும் அரசு துறை சார்ந்த நிகழ்ச்சிகள் திட்டமிடப்படும் போது பாதுகாப்பு கருதி, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில், பல விஷயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டு, அவை குறித்த செயல்பாடுகளை அரசு துறை பாதுகாப்பு அதிகாரிகள் கவந்தித்துக் கொள்வார்கள்.
தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு நலத்திட்டங்கள் – முதல்வர் அறிவிப்பு!
அந்த வகையில், தற்போது சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்ற பகுதிகளில், இனி ட்ரோன்கள் பறக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நிர்வாக பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்கள் கருதி இந்த உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி, இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download