TRB மூலம் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் இல்லை – தவிக்கும் ஆசிரியர்கள் !
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ச்சி பெற்று 3 ஆண்டுகளாகியும், பணி நியமனம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் தேர்வில் தேர்ச்சி பெற்ற 536 உடற்கல்வி ஆசிரியர்கள் பணி புரிய இயலாமல் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-I, உடற்கல்வி இயக்குநர் நிலை-II என 4,500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் இந்த பணிகளுக்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழக அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடம் உருவாக்கி பல வருடங்கள் ஆகி விட்டன. கடந்த 2012ம் ஆண்டுக்கு பிறகு, 8 ஆண்டுகளாக புதிய நியமனம் எதையும் மேற்கொள்ளாததால், ஏற்கனவே உருவாக்கப்பட்ட பணியிடங்களில் சுமார் 2 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனிடையே, கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடத்திற்கான தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடந்தது. அதில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு இறுதி தேர்வர் பட்டியல் முதற்கொண்டு வெளியாகிவிட்டது.
தையல், இசை, ஓவியம் ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றோர் பணியில் அமர்ந்து விட்ட நிலையில் இன்னும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும் பணி நியமன ஆணை வழங்கப்படாதது வேதனை அளிப்பதாக உள்ளதாக தேர்ச்சி பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இந்த பணிகளில் 51-55 வயதிற்குள் 3 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக பணி நியமனம் வழங்கப்படாத நிலையில், டிஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்றும், பணி கிடைக்காமலேயே ஓய்வு பெற்றுள்ளனர். இது மிகவும் வருந்தத்தக்கது என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்