நாடு முழுவதும் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை தகவல்!!

0
நாடு முழுவதும் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா - சுகாதாரத்துறை தகவல்!!
நாடு முழுவதும் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா - சுகாதாரத்துறை தகவல்!!
நாடு முழுவதும் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை தகவல்!!

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 1.84 லட்சம் பேர் புதிதாக பாதிப்புக்குள்ளாகினர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு:

கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை லட்சங்களை தாண்டி வருகிறது. இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகிறது. ஒரு பக்கம் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து வந்தாலும், மறுபக்கத்தில் கொரோனா பரவலும் அதிகரித்து வருகிறது.

TN Job “FB  Group” Join Now

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,84,372 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 13,65,704 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மாணவர்களை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு அழைக்க கூடாது – கல்வித்துறை உத்தரவு!!

நாடு முழுவதும் இதுவரை 1,23,36,036 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 1,027 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,72,085 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 11,11,79,578 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!