நாளை பள்ளிகளை திறக்க அனுமதியில்லை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!
மிக்ஜாம் புயலுக்கு பிறகு நாளை பள்ளிகளை திறக்க திட்டமிட்ட நிலையில் பள்ளிகளை திறக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளி திறப்பு:
தமிழகத்தில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் வெள்ளநீர் புகுந்து பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. தற்போது வரையிலும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் பொதுமக்கள் வீட்டை விட்டே வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், மிக்ஜாம் புயலின் போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அன்று முதல் தற்போது வரையிலுமே பள்ளிகள் திறக்கப்படாமலேயே இருந்து வருகிறது.
TNPSC தேர்வர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பெரும்பாலான பள்ளிகளில் மழைநீர் இன்னும் அகற்றப்படாமலும், சாய்ந்த மரங்கள் எதுவும் சுத்தப்படுத்தாமலேயே இருக்கிறது. இதனால், அனைத்து பணிகளும் முடிவடைந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தனியார் பள்ளிகளை மட்டும் திறக்க நிர்வாகம் முடிவு செய்த நிலையில் நாளை தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாய் அறிவித்துள்ளது.