தமிழகத்தின் 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை – இன்றைய வானிலை அறிக்கை!
தமிழகத்தின் நீலகிரி, தேனி, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தற்போது தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுகுகளில் கிழக்கு திசை காற்று திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் ஏப். 27, 28, 29ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 லட்சம் தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு மற்றும் இலவச பேருந்து பயண வசதி – முதல்வர் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து ஏப்.30 ஆம் தேதி தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், தேனி , ஈரோடு, தென்காசி, திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் அடுத்த 48 மணி நேரத்தில் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.