அதிரடியாக சவரனுக்கு ரூ.280 குறைந்த தங்கத்தின் விலை – குஷியில் நகைப்பிரியர்கள்!
அதிரடியாக இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை ஆனது சவரனுக்கு ரூபாய் 280 குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆபரண தங்கத்தின் விலை:
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பல்வேறு பொருட்களின் விலையும் அதிகரித்து விற்பனை செய்யப்படும். பண்டிகை காலங்களில் குறிப்பாக தீபாவளி சமயங்களில் பொதுமக்கள் தங்க நகை வாங்குவதற்கு திட்டமிடுவார்கள். இதனால் ஆபரணத் தங்கத்தின் தேவை அதிகம் இருப்பதன் காரணமாக விலையும் வழக்கத்தை விட உயர்ந்து காணப்படும். இந்நிலையில், அக்டோபர் 30ம் தேதியான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 280 அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூபாய் 45880, ஒரு கிராம் ரூபாய் 5735 கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்மழையால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு – பொதுமக்கள் அவதி!!
இதே போல் 24 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூபாய் 49,640 மற்றும் ஒரு கிராம் ரூபாய் 6205 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையானது சில்லறை விற்பனையில் இன்று ஒரு கிராம் ரூபாய் 78.50 க்கும், ஒரு கிலோ ₹78500 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு குறைந்துள்ளதன் காரணமாக நகைப் பிரியர்கள் குஷியில் உள்ளனர.