தேசிய செய்திகள்
மார்ச் 22 ஆம் நாள் ஊரடங்கு உத்தரவை ஆதரித்த பல்வேறு தரப்பு மக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்
கொரோனா வைரஸ் (கோவிட் 19) பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை, ஊரடங்கு உத்தரவை ஆதரித்த பல்வேறு தரப்பு மக்களை பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
- பல்வேறு துறைகள் மற்றும் பல அமைப்புகளைச் சேர்ந்த செல்வாக்குமிக்கவர்களும் சாதனையாளர்களும் ஜனதா ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவாக வந்து, அதை திறம்பட செய்ய தேசம் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸிற்கான 52 சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன
சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. COVID-19 இப்போது இந்தியா உட்பட 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளன.
- இந்த வைரஸ் கண்டறியப்பட்டவர்களுக்கு முறையான நோயறிதல் மற்றும் சிகிச்சையை வழங்குவதற்காக , இந்திய சுகாதார அமைச்சகம் இந்தியா முழுவதும் 52 சோதனை தளங்களை அனைத்து மாநிலங்களிலும் அமைத்துள்ளது.
சர்வதேச செய்திகள்
COVID-19 அவசர நிவாரண நிதிக்கு மாலத்தீவு 200,000 அமெரிக்க டாலர் ஒதுக்கியுள்ளது
சார்க் நாடுகளுக்காக உருவாக்கப்பட்ட கோவிட் -19 அவசர நிவாரண நிதிக்காக மாலத்தீவு அரசாங்கம் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்களைச் ஒதுக்கியுள்ளது. ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ் தலைமையிலான கோவிட் -19 தேசிய பணிக்குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாநில செய்திகள்
ஹிமாச்சல பிரதேசம்
இமாச்சல அரசு போலீஸ் ஸ்டேஷன் பார்வையாளர் சர்வே சிஸ்டம் மற்றும் இ-நைட் பீட் செக்கிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்துகிறது
இமாச்சலப் பிரதேச மாநில அரசு சிம்லாவில் இமாச்சல காவல்துறையினருக்கான காவல் நிலைய பார்வையாளர் கணக்கெடுப்பு முறை மற்றும் இ-நைட் பீட் செக்கிங் முறையை அறிமுகப்படுத்தியது.
- இந்த அமைப்புகள் காவல்துறையின் பணியை மேம்படுத்துவதற்கு உதவும்.
விருதுகள்
இந்திய மலையேறுபவர் சத்யருப் சித்தாந்தா ‘லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்’ இடம்பெற்றுள்ளார்
இந்திய மலையேறுபவர் சத்யருப் சித்தாந்தா அவரது அசாதாரண சாதனைகளுக்காக ‘லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ இடம் பெற்றுள்ளார். உலகில் உள்ள 7 கண்டங்கள் ஒவ்வொன்றிலும் மிக உயர்ந்த எரிமலைகளில் ஏறிய முதல் இந்தியர் இவர் ஆவர்.
ஒப்பந்தங்கள்
கோவிட் -19 க்கான காப்பீட்டு திட்டத்திற்காக டிபிஎஸ் வங்கி, பாரதி ஆக்ஸா இணைந்துள்ளன
கோவிட் -19 உட்பட அனைத்து மருத்துவ பரிசோதனையையும் உள்ளடக்கிய ஒரு காப்பீட்டு திட்டத்தை உருவாக்க டிபிஎஸ் வங்கி இந்தியா பாரதி ஆக்ஸாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
- இந்த திட்டம் கோவிட் -19 உட்பட அனைத்து மருத்துவ நிலைமைகளையும், 10 நாட்கள் வரை மருத்துவமனையில் மருத்துவம் பெறவும், 30 நாள் காலத்திற்கு ஒரு நாளைக்கு 5,000 ரூபாயை பெறவும் இத்திட்டம் வழிவகுக்கும்.
நியமனங்கள்
ஆர்.காந்தி, அனந்த் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை யெஸ் வங்கியில் கூடுதல் இயக்குநர்களாக ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது
இந்திய ரிசர்வ் வங்கி ஆர் காந்தி மற்றும் அனந்த் நாராயண் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை யெஸ் வங்கி லிமிடெட் குழுவில் கூடுதல் இயக்குநர்களாக மார்ச் 26 முதல் இரண்டு ஆண்டு காலத்திற்கு நியமித்தது.
- காந்தி முன்னாள் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராகவும், கோபாலகிருஷ்ணன் எஸ் பி ஜெயின் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இணை பேராசிரியராகவும் உள்ளார்.
விளையாட்டு செய்திகள்
ஒலிம்பிக் சுடர் ஜப்பானை அடைந்தது
ஒலிம்பிக் சுடர் கிரேக்கத்திலிருந்து ஜப்பானுக்கு தனது பயணத்தை நிறைவு செய்தது. வடகிழக்கு ஜப்பானின் மியாகி ப்ரிபெக்சரில் உள்ள ஜப்பானிய விமான தற்காப்புப் படையின் மாட்சுஷிமா தளத்தில் சுடரைச் சுமந்து செல்லும் ஒரு சிறப்பு போக்குவரத்து விமானம் தரையிறங்கியது.
முக்கிய நாட்கள்
இன பாகுபாட்டை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாக மார்ச் 21 அனுசரிக்கப்பட்டது
இன பாகுபாட்டை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் ஆண்டுதோறும் மார்ச் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1966 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட ஐ.நா பொதுச் சபைத் தீர்மானம், மார்ச் 21 ஆம் தேதி இன பாகுபாட்டை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாக ஆண்டுதோறும் நினைவுகூரப்படும் என்று அறிவித்தது.
மார்ச் 21 அன்று சர்வதேச வன நாள் கொண்டாடப்பட்டது
ஒவ்வொரு ஆண்டும், ஐக்கிய நாடுகள் சபை மார்ச் 21 அன்று சர்வதேச வன தினத்தை கொண்டாடுகிறது. இந்த நாள் 2012 முதல் கொண்டாடப்படுகிறது. இது காடுகளின் விழிப்புணர்வையும் முக்கியத்துவத்தையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. காட்டைக் காப்பாற்றுவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
- இந்த ஆண்டு இந்த தினம் காடுகள் மற்றும் பல்லுயிர் என்ற கருப்பொருளின் கீழ் நாள் கொண்டாடப்படுகிறது
பிற செய்திகள்
முன்னாள் சாம்பியன் குத்துச்சண்டை வீரர் மற்றும் பயிற்சியாளர் ரோஜர் மேவெதர் காலமானார்
இரண்டு முறை உலக சாம்பியனான ரோஜர் மேவெதர் தனது 58 வயதில் காலமானார். 1981 இல் தொடங்கிய தனது 18 ஆண்டு வாழ்க்கையில் 130 மற்றும் 140 பவுண்டுகள் என்ற பிரிவில் பட்டங்களை வென்றார்.
- அவர் தனது முதல் 17 போட்டிகளில் வென்று சாதனை படைத்தார். உலக குத்துச்சண்டை சங்கத்தின் ஜூனியர் லைட்வெயிட் மற்றும் உலக குத்துச்சண்டை கவுன்சில் ஜூனியர் வெல்டர்வெயிட் பட்டத்தை 1987 இல் வென்றார்.
இந்திய கால்பந்து ஜாம்பவான் பி.கே பானர்ஜி 83 வயதில் காலமானார்
இந்திய கால்பந்து வீரர் பிரதீப் குமார் பானர்ஜி தனது 83 வயதில் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் காலமானார். அவர் மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியில் ஜூன் 23, 1936 இல் பிறந்தார்.
- அவரது பங்களிப்பை போற்றும் வகையில் ஃபிஃபா விருது வழங்கி அங்கீகரித்தது.
Download Today Current Affairs PDF
To Subscribe Youtube Channel கிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channel கிளிக் செய்யவும்