SI தேர்வில் முறைகேடா ??? – அரசு பதில் அளிக்க உத்தரவு
தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 969 காலிப்பணியிடங்களை கொண்ட துணை ஆய்வாளர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் குவிந்தது. இதனால் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நடைபெறுகிறது.
கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 13 தேதிகளில் இந்த 969 காலிப்பணியிடங்களை கொண்ட துணை ஆய்வாளர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மொத்தம் 1.50 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதியுள்ளனர்.
அதில் 1200 மேற்பட்டோர் இதில் முறைகேடு செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறியுள்ளனர். இது குறித்து முதல்வர் மற்றும் காவல் துறை தலைவர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேர்வினை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும் என கோரப்பட்டது. இது குறித்து விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு, சீருடை பணியாளர் தேர்வாணையம் மற்றும் காவல் துறை டிஜிபி ஆகியோர் பதில் அளிக்க தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்