TNPSC பொது தமிழ் – தமிழ் இலக்கியம்
திருக்குறள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
திருக்குறள்
இலக்கியம் பாடத்தொகுப்பு:
- திருக்குறள் – திரு + குறள்
- இரண்டு அடிகளாலான குறள் வெண்பாக்களால் ஆனது.
- திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார்.
- திருக்குறள் முப்பால்களை கொண்டது. அவை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகியவை ஆகும்.
- திருக்குறள் 133 அதிகாரங்களையும் 1330 குறள்களையும் கொண்டது.
- திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைத்துள்ளன. திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.
- உலக மொழியில் உள்ள அறநூல்களில் முதன்மையானது திருக்குறள். இது பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- உலக மொழிகளில் பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். நூற்றெழு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ இதில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளின் அருமையையும் விளக்குகிறது.
- மலையச்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812-இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.
சிறப்புப் பெயர்கள்:
- உலகப் பொதுமறை
- முப்பால்
- வாயுறை வாழ்த்து
- பொதுமறை
- பொய்யாமொழி
- தெய்வநூல்
- தமிழ்மறை
- முதுமொழி
- உத்தரவேதம்
- திருவள்ளுவம்
- திருவள்ளுவ மாலை என்பது திருக்குறளின் பெருமை குறித்துச் சான்றோர் பலர் பாடிய பாக்களின் தொகுப்பாகும்.
- திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் பரிமேலழகர் (மேலும் பலர் எழுதியுள்ளனர்)
- அறத்துப்பாலில் – 38 அதிகாரங்கள், பொருட்பாலில் – 70 அதிகாரங்கள், இன்பத்துப்பாலில் – 25 அதிகாரங்கள் உள்ளன.
- விக்டோரியா மகாராணி, காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள்.
- திருக்குறளுக்கு உரைசெய்த பதின்மர்: தருமர், தாமத்தர், பரிதி, திருமலையர், பரிப்பெருமாள், மணக்குதவர், நச்சர், பரிமேலழகர், மல்லர், காளிங்கர்.
- திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் – வீரமா முனிவர். ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
திருவள்ளுவர்:
- திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவரது காலம் கி.மு.31 என்று கூறுவர். இதை தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
- இவரது ஊர் பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை. இவர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்பது உறுதி.
- திருவள்ளுவர் செஞ்ஞாப்போதார், தெய்வப் புலவர், நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபாங்கி, பெருநாவலர், பொய்யில் புலவர் என பல சிறப்புப் பெயர்களால் போற்றப்படுகிறார்.
- கிறிஸ்து ஆண்டு (கி.பி.) 31 – திருவள்ளுவர் ஆண்டு. எ.கா: 2013 31 – 2043 (கி.பி. 2013ஐ திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்.)
- திருக்குறளின் பெருமையை உணர்ந்த வீரமாமுனிவர் இலத்தீனிலும், ஜி.யு.போப் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தனர்.
- இந்நூல் உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
- திருவள்ளுவமாலை என்னும் நூல் இதன் பெருமைக்கும்ää சிறப்புக்கம் சான்றாக திகழ்கிறது.
- உருசிய நாட்டில் அணு துளைக்காத கிhரம்ளின் மாளிகையில் உள் சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறளும் இடம் பெற்றுள்ளது.
- இங்கிலாந்து நாட்டுக் காட்சிச் சாலையில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது. ‘வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’ என்றும் ‘இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே’ என்றும் பாவேந்தர் பாரதிதாசன் திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.
- மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812ல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.
- திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.
- திருக்குறள் ஏழு சீர்களால் அமைந்த வெண்பாக்களைக் கொண்டது.
- ஏழு என்னும் எண்ணுப்பெயர் எட்டுக் குறட்பாக்களில் இடம் பெற்றுள்ளது.
- அதிகாரங்கள் 133 இதன் கூட்டுத்தொகை ஏழு.
- மொத்த குறட்பாக்கள் இதன் கூட்டுத் தொகையும் ஏழு.
திருவள்ளுவமாலை:
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – கபிலர்
- காலம் – கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவரென்றும்ää சங்க காலத்திற்கு பின் வாழ்ந்தவர் என்றும் கூறுவர்.
நூல் குறிப்பு:–
- திருக்குறளின் சிறப்பினை உணர்த்த திருவள்ளுவமாலை என்னும் நூல் எழுந்தது.
- இந்நூலில் ஐம்பத்தைந்து பாடல்கள் உள்ளன.
- ஐம்பத்துமூன்று புலவர்கள் பாடியுள்ளனர்.
- திருவள்ளுவ மாலை “திணையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்டபனையளவு காட்டும் படித்தால்; – மனையளகு வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி”.கபிலர்
பத்தொன்பது அதிகாரங்கள்
- அன்புடைமை
- பண்புடைமை
- கல்வி
- கேள்வி
- அறிவு
- அடக்கம்
- ஒழுக்கம்
- பொறையுடைமை
- நட்பு
- வாய்மை
- காலம்
- வலி
- ஒப்புரவறிதல்
- செய்ந்நன்றி அறிதல்
- சான்றாமை
- பெரியரைத் துணைக்கோடல்
- பொருள் செயல்வகை
- வினைத்திட்பம்
- இனியவை கூறல்
அன்புடைமை
1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
பொருள்: அன்பை அடைத்து வைக்க தாழ்ப்பாள் இல்லை அன்புக்குரியவரின் துன்பத்தைப் பார்த்ததுமே நம் அன்புää கண்ணீராக வெளிப்பட்டு நிற்கும்.
2. அன்பில்லார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
பொருள்: அன்பில்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கு மட்டும் உரியது என்னு எண்ணுவர் அன்பு எடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.
3. அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு
பொருள்: உடம்போடு உயிர் இணைந்து இருப்பதைப் போல, வாழ்க்கை நெறியோடு அன்பு இணைந்து இருக்கிறது.
4. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு
பொருள்: அன்பு விருப்பத்தைத் தரும். விருப்பம் அனைவரிடமும் நட்புக்கொள்ளும் பொரும்சிறப்பைத் தரும்.
5. அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு
பொருள்: அன்போடு பொருந்திய வாழ்க்கை நெறியைக் கடைப்பிடித்தவர் உலகத்தில் மகிழ்ச்சி உடையவர் ஆவர்.
பண்புடைமை
1. எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
பொருள்: யாரிடத்தும் எளிமையாகப் பழகினால் பண்புடைமை என்னும் நன்னெறியை அடைதல் எளிது.
2. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
பொருள்: அன்புடையவராகத் திகழ்தல், உயர்ந்த குடிப்பிறப்பு ஆகிய இவ்விரண்டும் பண்பாளரின் இயல்பு.
3. உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு
பொருள்: உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று, பொருந்தத்தக்க பண்பால் ஒத்திருத்தலே மக்களாகக் கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.
4. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
பொருள்: நேர்மையையும் அறத்தையும் கொண்டு பிறருக்கு உதவுதல் வேண்டும். அத்தகைய பண்பாளரையே உலகம் போற்றும்.
5. நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு
பொருள்: விளையாட்டாக ஒருவரை இகழ்ந்து பேசுதலும் துன்பத்தைத் தரும். பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிருப்பினும் நல்ல பண்புகள் இருக்கும்.
கல்வி
1. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
பொருள்: நூல்களைக் குற்றமறக் கற்றல் வேண்டும். கற்றபடி நடத்தல் வேண்டும்.
2. எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு
பொருள்: எண்ணும் எழுத்தும் ஆகிய இவ்விரண்டும் மனிதர்களுக்கு இரு கண்கள் எனக் கூறுவர்.
3. கண்உடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்உடையார் கல்லா தவர்
பொருள்: கல்வி கற்றவர் கண் உடையவர் கல்லாதவர் முகத்தில் இரண்டு புண்ணுடையவர் ஆவர்.
4. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்
பொருள்: அறிவில் சிறந்த புலவர்களுடன் பேசிப் பழகும்போது மகிழ்ச்சியாக இருப்பதும், அவர்களை விட்டுப்பிரியும்போது, ‘இனி இவரை எப்பொழுது காண்போம்’ என எண்ணிப் பிரிவதும் புலவரின் இயல்பாகும்.
5. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்
பொருள்: செல்வம் உடையவர்மன் ஏழை கவலைப்பட்டு இரந்து நிற்பதுபோலக் கற்றவர்முன் பணிந்து கற்பவரே உயர்ந்தவர் பணிந்து கல்லாதவர் தாழ்ந்தவர்.
கேள்வி
1. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்தள் எல்லாம் தலை.
பொருள்: செல்வங்களுள் சிறந்தது சிறந்து கேள்விச் செல்வம். அதுவே செல்வங்கள் அனைத்திலும் முதன்மையானது.
2. செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
பொருள்: செவிக்குணவாகிய நல்லறிவு கிடைக்காத பொழுதில் வயிற்றுக்கும் சிறிதளவு உணவு அளிக்கப்படும்.
3. செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து
பொருள்: செவி உணவாகிய கேள்வியினை உடையவர் இவ்வுலகில் வாழ்ந்தாலும், அவர் அவி உணவைக் கொண்டு தேவர்களுக்கு ஒப்பாவர்.
4. கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்(கு)
ஒற்கத்தின் ஊற்றாந் துணை
பொருள்: ஒருவன் கற்க வாய்ப்பு இல்லாமல் இருந்தாலும் கற்றாரிடம் சென்று கேட்டறிய வேண்டும். வாழ்க்கையில் தளர்ச்சியுறும்போது அக்கேள்வியறிவானது அவனுக்கு ஊன்றுகோல் போலத் துணையாக நிற்கும்.
5. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்
பொருள்: வழுக்குகின்ற நிலத்தில் ஊன்றுகோல் உதவுவதுபோல நல்லொழுக்கம் மிக்க பெரியோரின் வாய்ச்சொற்கள் வாழ்க்கைக்கு என்றும் உதவும்.
அறிவுடைமை
1. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
பொருள்: அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.
2.சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு
பொருள்: மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.
3. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
பொருள்: எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப்பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.
4. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு
பொருள்: தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பதே அறிவாகும்.
5. உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.
பொருள்: உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு.
மேலும் கூடுதல் குறிப்புகளை அறிய கீழ் உள்ள இணைப்பில் PDF -பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
தமிழ் இலக்கியம் திருக்குறள் PDF Download
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்
TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download
TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Facebook Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்
Very important qustions.. thank you