TNPSC தேர்வில் தேர்ச்சி பெற என்ன பண்ணனும் தெரியுமா? இதை தெரிஞ்சுக்கோங்க!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1, 2 ,4 என பல்வேறு தேர்வுகள் மூலம் அதன் காலிப்பணியிடங்கள் நிரப்பி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முறையான பயிற்சி என்பது மிகவும் முக்கியம். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் பொது தமிழ் பாடத்தில் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்வி கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.இது தேர்வர்களுக்கு தேர்வில் தேர்ச்சி பெற பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1. நிலமடத்தை உழைத்துப் பெறு! உரிய நேரத்தில் பெறு! முயற்சி செய்து பெறு’ என ஆணையிடுவதாக கூறியவர் யார்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) வாணிதாசன்
(D) அண்ணா
விடை : (D)
2. அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினனாக நான் பேசுகிறேன் என்று கூறியவர் யார்?
(A) காந்தி
(B) பாரதியார்
(C) அம்பேத்கர்
(D) திரு.வி.க
விடை : (C)
TNPSC தேர்வு எழுத போறீங்களா? – அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுகோங்க !
3. பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்க வேண்டும் என்று விரும்பியவர் யார்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) பெரியார்
(D) அம்பேத்கார்
விடை : (C)
4. தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் பற்றி, காந்தியடிகள் எந்த இதழில் எழுதியுள்ளார்?
(A) இந்தியன் போஸ்ட்
(B) தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம்
(C) இந்தியன் ஒப்பீனியன்
(D) இந்தியன் பிரண்ட்
விடை : (C)
5. சுபாஷாபிமானம் – பொருள் கூறுக.
(A) தாய் நாட்டுப் பற்று
(B) தாய்மொழிப் பற்று
(C) தாயின் மீது பற்று
(D) சகோதரப் பற்று
விடை : (B)


























