TNPSC தேர்வில் கணிதத்தில் முழு மார்க் வேண்டுமா? முக்கியமான கேள்வி-பதில் இதோ!
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு போட்டித் தேர்வு நடத்தி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவது தேர்ச்சி பெறும் வாய்ப்பு அதிகப்படுத்துகிறது. எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் முந்தைய ஆண்டுகளில் தேர்வுகளில் கணிதத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்த தொகுப்பு கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
1. மாட்டு வண்டிச் சக்கரத்தின் ஆரம் 35 செ.மீ அது 154 மீ தொலைவு கடந்தால், அச்சக்கரம் எத்தனை முழுச்சுற்றுகள் சுற்றியிருக்கும்?
(A) 70
(B) 189
(C) 119
(D) 86
விடை : A
2. சரண் என்பவரின் வயது தன் மகன் சங்கரின் வயதைப் போல 6 மடங்கு 4 வருடங்கள் கழித்து அவரின் வயது மகனின் வயதைப் போல் 4 மடங்கு எனில், அவர்களின் தற்போதைய வயது என்ன?
(A) 30,5
(B) 36,6
(C) 48,8
(D) 24,4
விடை : B
3. 200 க்கும் 300 க்கும் இடையே 6, 8 மற்றும் 9 ஆகிய எண்களால் வகுபடக் கூடிய எண்கள் உள்ளன?
(A) ஒன்று
(B) இரண்டு
(C) மூன்று
(D) நான்கு
விடை : B
TNPSC தேர்வு எழுத விருப்பமா? அப்போ இதெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
4. ஒரு தொகையின் தனிவட்டி 3 ஆண்டுகளுக்கு ரூ.235.20 மேலும் வட்டி வீதம் 14% எனில் அத்தொகையின் மதிப்பு என்பது
(A) ரூ. 480
(B) ரூ. 560
(C) ரூ. 650
(D) ரூ. 720
விடை : B
5. ஒருவர் ₹ 10,000 ஐ ஆண்டுக்கு 9% தனிவட்டி வீதத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் அவருக்கு கிடைக்கும் மொத்த தொகை எவ்வளவு?
(A) 12,500
(B) 11,800
(C) 12,700
(D) 12,000
விடை : C



























