TNPSC குரூப் 1 தேர்வுகள் ஒத்திவைப்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0
TNPSC குரூப் 1 தேர்வுகள் ஒத்திவைப்பு - அதிகாரபூர்வ அறிவிப்பு!!

TNPSC குரூப் 1 தேர்வுகள் ஒத்திவைப்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு!!

கொரோனா பரவலின் எதிரொலியாக தற்போது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து டிஎன்பிஎஸ்சி நடந்த இருந்த குரூப் 1 தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குரூப் 1 தேர்வுகள்

தமிழகத்தில் துணை ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தமாக 66 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதமே இதற்கான அறிவிப்பு வெளியானது. இந்த தேர்விற்கு 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் கடும் கட்டுப்பாடுகளுடன் 856 தேர்வு மையங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வுகளை எழுதினர்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 – மே 10 முதல் வழங்கல்!!

இந்த பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு இந்த மே மாதம் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. தற்போது தமிழக அரசு கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவை வரும் மே 10 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை அமல்படுத்தியுள்ளது. 28 ஆம் தேதி தேர்வு நடைபெற்றால், சுமார் 3500 பேர் சென்னைக்கு வந்து தேர்வுகளை எழுதும் சூழல் ஏற்படும். இதனால் கொரோனா பரவும் அபாயமும் உள்ளது. ஏற்கனவே, மே மாதம் நடைபெற இருக்கும் அனைத்து தேர்வுகளையும் ஒத்தி வைக்குமாறு மத்திய அரசு மாநில அரசினை அறிவுறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

இந்த அசாதாரணமான சூழலை கருத்தில் கொண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடக்கவிருக்கும் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!