TNPSC குரூப் 4 தேர்வு அறிவிப்பு எப்போது? – 2024 பிப்ரவரியில் தேர்வு!!
TNPSC குரூப் 4 தேர்வின் அடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது தமிழக அரசின் துறைகளில் உள்ள வரைவாளர், தட்டச்சர், நில வரைவாளர், உதவியாளர் போன்ற பல்வேறு பணிகளுக்கும் குரூப் 4 தேர்வு வாயிலாக ஊழியர்களை நியமனம் செய்கிறது. 2022 ஆகஸ்ட் மாதம் கடைசியாக குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் 10,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா?? இதோ எளிய வழி!
இதற்கான விண்ணப்ப பதிவுகள் நடப்பு மாதம் முதலாகவே தொடங்கப்பட்டு 2024 பிப்ரவரி மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 15,000 காலியிடங்கள் இத்தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் TNPSC தேர்வுக்கு தயாராக விரும்பும் தேர்வர்கள் தங்களது ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்கும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் TNPSC குரூப் 4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும்.