நவ.19 அனைத்து மதுபானக்கடைகளும் மூடல் – அரசு அதிரடி உத்தரவு!
டெல்லியில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை அளிக்க அரசு உத்தரிட்டுள்ளது.
அரசு உத்தரவு:
நாட்டில் முக்கிய தினங்களில் மற்றும் தேசிய தலைவர்களின் நினைவு தினங்கள் போன்ற நாட்களில் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் டெல்லியில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய சஷ்டி ( சாத் பூஜை ) தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் உலர் நாளாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. திருவிழாவை ஒட்டி டெல்லி முழுவதும் உள்ள மதுக்கடைகள் அனைத்தையும் முடுவதற்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக இன்ஜினியர் பட்டதாரிகளே.. TNPSC AE தேர்வு நெருங்கியாச்சு.. இதை மட்டும் பண்ணுங்க!!
கிழக்கு உத்திரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களை பூர்வீகமாகக் கொண்ட மக்கள் சூரியனை வழிபடும் ஒரு முக்கிய திருவிழா சாத் தினம் ஆகும். மதுபான கடை விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று டெல்லி கலால் துறை வெளியிட்டுள்ளது.