TNPSC குரூப் 2 மெயின்ஸ் மறு தேர்வு நடத்தப்படுமா? – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

0
TNPSC குரூப் 2 மெயின்ஸ் மறு தேர்வு நடத்தப்படுமா
TNPSC குரூப் 2 மெயின்ஸ் மறு தேர்வு நடத்தப்படுமா

TNPSC குரூப் 2 மெயின்ஸ் மறு தேர்வு நடத்தப்படுமா? – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் குரூப் 2 மெயின்ஸ் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்ற வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்த 2022ஆம் ஆண்டு குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் மெயின் தேர்வு பிப்25 ஆம் தேதி நடத்தப்பட்டது. ஆனால், அதில் பதிவு எண் மாறி இருப்பதாக குற்றசாட்டு எழுந்தது. இதனை சரி செய்ய ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. எனவே, சரியாக` தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டதால் மீண்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்தபோது காலை 9.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. பதிவு எண் மாறிய இடங்களில் வினாத்தாள் உடனடியாக திரும்ப பெறப்பட்டன. பதிவு எண் மாறிய வினாத்தாளை யாரும் திறக்கவில்லை. தாமதமின்றி, போதிய அவகாசத்துடன் சரியான பதிவெண் கொண்ட வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. எந்த தேர்வு மையத்திலும் தேர்வு நேரம் நிர்ணயிக்கப்பட்ட 3 மணி நேரத்தை தாண்டவில்லை. வினாத்தாளின் பக்கவாட்டில் உள்ள சீலை அகற்றாமல் வினாத்தாளை யாரும் பார்க்கவோ, விவாதிக்கவோ வாய்ப்பில்லை என தெரிவித்தனர். இதன் பின்னர், நீதிபதி அளித்த உத்தரவில் டிஎன்பிஎஸ்சியின் நடவடிக்கையில் நீதிமன்றத்திற்கு முழு திருப்தி எனவும், இனி வரும் காலங்களில் இது போல நடைபெறக்கூடாது என தீர்ப்பு வழங்கி மனுவை தள்ளுபடி செய்தார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!