TNPSC குரூப் 1 தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவை அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்:
TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது சமீபத்தில் Group 1 முதன்மைத் தேர்வு குறித்த அறிவிப்பினை வெளியிட்டது. இத்தேர்வின் மூலம் காலியாக உள்ள 90 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இத்தேர்வானது டிசம்பர் 10 முதல் 13ம் தேதி வரை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் 120+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
இந்நிலையில் TNPSC ஆணையம் ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் முதன்மை தேர்வு எழுதிய 1888 பேரில், 190 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு எழுதிய தேர்வர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தேர்வு முடிவை பெற்றுக்கொள்ள முடியும். மேலும், நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 7ம் தேதி தொடங்கும் என அறிவித்துள்ளது.


























