டி.என்.பி.எஸ்.சி தேர்வு மதிப்பீடு முறைக்கு எதிராக வழக்கு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையதின் குரூப் 1 தேர்வு மதிப்பீடு முறை மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் டிஎன்பிஎஸ்சி க்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
அதாவது டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 தேர்விற்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல் ஜனவரி மாதம் வெளியானது. ஆனால் அதில் தேர்வு எழுதிய தேர்வாளர் ஒருவர் தனது மதிப்பெண் குறைவாக இருப்பதாக அது குறித்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதாவது ஒருவர் எழுதிய தேர்வு விடைத்தாள்களை ஒருவர் முதலில் மதிப்பீடு செய்வர். அதன் பிறகு மற்றொருவர் அதனை மதிப்பீடு செய்வர். பிறகு இரண்டையும் வகுத்து அதில் இருந்து மதிப்பெண் வழங்கப்டுகிறது.
ஆனால் வழக்கு தொடர்ந்த தேர்வாளர் இந்த முறை இயற்கைக்கு முரண்பாடானது என்றும் இதனை மாற்ற வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து பதில் அளிக்க டிஎன்பிஎஸ்சி செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்