TNPSC தேர்வுகள் எப்போது நடத்தப்படும்? – அரசின் அளித்த விளக்கம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது ஒத்திவைக்கபட்ட தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது வருடம் தோறும் பல்வேறு பணியிடங்களை நிரப்ப குரூப் 1, குரூப்4, குரூப் 2 உள்ளிட்ட பல போட்டி தேர்வுகளை நடத்துவது வழக்கம். அதே போல் இந்த 2020 ஆம் ஆண்டிற்கான தேர்வர்கள் பற்றிய அட்டவணையை கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டது. அதன்படி, குரூப் 1 தேர்விற்குரிய அறிவிப்பை ஜனவரி மாதம் வெளியிட்டது. அந்த தேர்வானது கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்வு குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டால் தேர்வர்கள் நிச்சயம்:
கொரோனா முடிந்து, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டால் தான் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்ற அரசுப் பணியாளர் தேர்வாணையம் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
புதிய தேர்வு அட்டவணை:
மேலும் தேர்வுக்கு முன்னதாக புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. ஆண்டுதோறும் அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் 10ஆயிரம் பேர் அரசுப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகின்றனர். தற்போதைய நிலையில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஆயிரக்கணக்கானவர்கள் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |