தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட தொல்லியல் அலுவலர் பணிக்கான தேர்வு சென்னையில் மட்டும் தான் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டை உலுக்கிய குரூப் 4 முறைகேட்டினை தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே குரூப் 4 முறைகேடு தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசாரால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து காவலர் தேர்வு, குரூப் 2, குரூப் 2a தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக அடுக்கடுக்காக புகார்கள் எழுந்தன.
கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தொல்லியல் அலுவலர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலம் என அனைத்தும் முடிந்து தேர்வும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டித் தேர்வு சென்னையில் மட்டும் தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவை மற்றும் மதுரை மையங்களில் தேர்வு நடைபெறுவதாக இருந்த மையங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இப்பணியிடங்களுக்கான ஹால் டிக்கெட் 2020 வெளியானது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download Hall Ticket 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்