TNPSC துறை தேர்வு – தகுதியானவர்கள் விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்ட அறிவிப்பில் இந்த ஆண்டிற்கான துறைத் தேர்வு (மே – 2022) குறித்து தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் ஏற்கனவே பணிபுரியும் பணியாளர்களுக்கு பதவி உயர்வுக்காக இந்த தேர்வு நடைபெற போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு (30.04.2022) முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். இதை பற்றிய முழுமையான விவரங்களும் இப்பதிவில் எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த ஆண்டு (2022) மே மாதம் துறைத் தேர்வுகள் குறித்து தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
- விண்ணப்பதாரர்கள் முன்னதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ஏதேனும் ஒரு துறையின் பிரிவில் பணிபுரிபவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு ஊதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு தேர்வு கட்டணமாக ரூ.200/- அனைத்து விண்ணப்பதாரர்களும் செலுத்த வேண்டும். மேலும் இப்பணிக்கு பதிவு செய்ய பதிவு கட்டணமாக ரூ.30/- வசூலிக்கப்படும்.
Best TNPSC Coaching Center – Join Now
- இந்த துறை தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT) மற்றும் Descriptive Type தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
TNPSC விண்ணப்பிக்கும் முறை:
இந்த துறை தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். நாளை (29.04.2022) ஒரு நாள் மட்டுமே விண்ணப்பிக்க இருப்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.