மே 2 முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு – பண்டிகை எதிரொலி!
இன்னும் ஒரு சில நாட்களில் வரவிருக்கும் ஈத்-உல்-பித்ர் பண்டிகையை முன்னிட்டு மே 2 முதல் 5 வரை கிட்டத்தட்ட 4 நாட்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்படும் என பாகிஸ்தான் மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு புனித நாள் ஈத்-உல்-பித்ர் பண்டிகை. இந்த நோன்புப் பெருநாள் அல்லது ஈகைத் திருநாள், இஸ்லாமியர்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து கொண்டாடப்படுகின்றது. மேலும், இந்த பண்டிகையானது ஷவ்வால் பிறை தெரியும் நாட்களை பொறுத்து ஒவ்வொரு நாடுகளுக்கும் வேறுபாடும். இப்போது இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடான பாகிஸ்தானில் ஈத்-உல்-பித்ர் பண்டிகை மே 2 முதல் 5 வரை கிட்டத்தட்ட 4 நாட்களுக்கு அனுசரிக்கப்பட இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (ஏப்.30) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த கொண்டாட்டத்தை கருத்தில் கொண்டு மே 2 முதல் 5 வரையுள்ள நாட்களுக்கு பொது விடுமுறை அளித்து பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட பிரதமர் அலுவலக அறிவிப்பின்படி, ‘ஈத்-உல்-பித்ர் பண்டிகைக்கான விடுமுறை நாட்கள் மே 2 முதல் 5 வரை இருக்கும். அதனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை 4 நாட்களுக்கு மூடப்படும்’ என தெரிவிக்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இதற்கு முன்னதாக ஈத்-உல்-பித்ர் பண்டிகையை முன்னிட்டு மே 3 முதல் 5 வரை மூன்று நாட்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் மே 2 முதல் 5 வரை நான்கு நாட்களுக்கு விடுமுறை அளித்து பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இப்போது பாகிஸ்தானில் வரும் மே 2ம் தேதி மாலையில், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஈத்-உல்-பித்ர் பண்டிகைக்கான ஷவ்வால் பிறை தெளிவாக தெரியும் என்றும் அதனை நீண்ட நேரம் பார்க்க முடியும் என்றும் வானியலாளர்கள் கணித்துள்ளனர்.