கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (ஏப்.30) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
புதுக்கடை பகுதிகளில் உள்ள உப மின் நிலையத்தின் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் நாளை ஏப்ரல் 30ம் தேதி புதுக்கடை உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை உள்ள பகுதிகள்
தமிழகத்தில் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் தவறாமல் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் மின் பயனாளர்களுக்கு பாதுகாப்பான முறையில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் மின்னணு சாதனங்கள் அனைத்தும் சரிபார்க்கப் படுதல், பெரும்பாலான இடங்களில் மின் சாதனங்கள் கோளாறு மற்றும் வயர்கள் மாற்றுதல், மின் கசிவு ஏற்படுவதை சரி பார்த்தல் ஆகியவற்றை செய்கின்றன. இந்த பழுதுகளை சரி செய்வதற்காக மாதம் தோறும் மின் துண்டிப்பு ஏற்படுகிறது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (மே 1) டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் ஒரே நாளில் மின்தடை அறிவிக்கப்படவில்லை. மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகள் எதுவோ அந்த பகுதிகளுக்கு மட்டும் முன்கூட்டியே அறிவிக்கப்படுகிறது. அதன்படி, மின் பராமரிப்பு பணிகள் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும், மின் நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் அனைவரும் மின் சார்ந்த பணிகளை முன்கூட்டியே செய்வதற்காக திட்டமிட்டுள்ளனர்.
Exams Daily Mobile App Download
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து ஏப்ரல் 30ம் தேதி முன்சிறை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட புதுக்கடை, ஆலாங்குளம், மாடன் கோவில், கைசூண்டி, வெள்ளியம்பலம், வேங்கொடு உள்ளிட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதால் நாளை ஏப்ரல் 30ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.