தமிழகத்தில் நாளை மறுநாள் (மே 1) டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
நாமக்கல் மாவட்டத்தில் மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் சில்லறை வியாபாரிகள், கிளப்கள், ஹோட்டல், பார்கள், ஆகியவற்றில் மதுபானங்களை விற்க தடை செய்யப்பட்டுள்ளது.
மதுபான கடைகள் விடுமுறை
தமிழகத்தில் அதிகமாக மதுபான கடைகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் மது பிரியர்கள் அதிகம் இருக்கின்றன. தமிழ்நாட்டில் தனியார் பார்களை தொடர்ந்து அரசு மதுபான கடைகள் இயங்கி கொண்டிருக்கின்றன. இதனால் தமிழ்நாடு அரசுக்கு அதிகமாக வருமானங்கள் கிடைக்கிறது. இதற்காக மதுபானக்கடைகளை மூடுவதற்கான எதிர்ப்புகள் வந்தாலும் கடைகளை மூடாமல் இருக்கின்றன. மதுப் பிரியர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மதுபான உரிமையாளர்கள் மதுபானங்களை அதிகமாக தயாரிக்கின்றனர்.
மே மாதத்தில் 14 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
மதுபான கடைகளுக்கு காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் பிறந்த நாள், வடலூர் ராமலிங்கம் நினைவு நாள், சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம் ஆகிய எட்டு நாட்களுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது வழக்கம். டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு வார விடுமுறை விடப்படுவது இல்லை. அதனால் வார விடுமுறை அளிக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மே 1ம் தேதி நாமக்கல், சென்னை, கள்ளக்குறிச்சி மற்றும் பல மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து, மதுபான சில்லறை விற்பனை கடைகள் , மதுக் கடைகளை மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது அடிப்படையில் நாளை மறுநாள் அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக் கடைகளை மூட வேண்டும் என்று, மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக் கூடங்கள் திறந்தாலோ அல்லது மறைமுகமாக விற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.