TNPSC உதவி சிறை அலுவலர் அறிவிப்பு 2018 – 30 பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சிறைத் துறையில் 30 உதவி சிறை அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 08.10.2018 முதல் 07.11.2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
TNPSC உதவி சிறை அலுவலர் அறிவிப்பு 2018 – 30 பணியிடங்கள்:
பதவியின் பெயர்: உதவி சிறை அலுவலர் (Assistant Jailor)
மொத்த பணியிடங்கள்: 30 (ஆண் – 16, பெண் – 14)
குறிப்பு: உதவி ஜெயிலர் (ஆண்கள்) பதவிக்கு பெண்கள் தகுதியற்றவர்கள், உதவி ஜெயிலர் (மகளிர்) பதவிக்கு ஆண்கள் தகுதியற்றவர்கள்.
சம்பள விகிதம்: நிலை -11 ரூ .35,400 – ரூ. 1,12,400 / –
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.07.2018 அன்று 21 வயது நிரம்பியவராகவும், பொது பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
SCs, SC(A)s, STs, MBC&DCs, BCs, BCMs விண்ணப்பதாரர்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் 08.10.2018 முதல் 07.11.2018 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு கட்டணம்: ரூ. 150/-
(முதல் முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150 /-)
முக்கிய நாட்கள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி | 08-10-2018 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி | 07-11-2018 |
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி | 09.11.2018 |
தேர்வு நாள் (தாள் 1 – 10 to 1 PM) (தாள் 2 – 2 to 5 PM) | 06.01.2019 (ஞாயிற்றுக்கிழமை) |
தற்காலிக நாட்கள்:
தேர்வு முடிவுகளின் வெளியீட்டு தேதி | மார்ச் 2019 |
சான்றிதழ் சரிபார்ப்பு | ஏப்ரல் 2019 |
நேர்முக தேர்வு | மே 2019 |
கலந்தாய்வு | மே 2019 |
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பதிவிறக்கம் |
அதிகாரப்பூர்வ வலைதளம் | கிளிக் செய்யவும் |
ஆன்லைன் விண்ணப்பம் | கிளிக் செய்யவும் |
பாடத்திட்டம் | கிளிக் செய்யவும் |
தேர்வு மாதிரி | கிளிக் செய்யவும் |
TNPSC WhatsAPP Group – Click Here
Telegram Channel Click Here