
மக்களுக்கு எச்சரிக்கை…நாளை(22-05-2025) இந்த பகுதிகளில் “Power Cut”.. அவசர வேலை இருந்தா உடனே செய்து முடியுங்கள்”..!!
நகரின் மின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மாதத்தில் ஒரு நாள் மட்டும் துணை மின் நிலையங்களில், தமிழக மின் வாரியத்தால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறுகிய நேரத்திற்கு மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை (22-05-2025) திருவாரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
BHEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || ரூ.40,000/- சம்பளம்!
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
திருவாரூர்:
திருத்துறைப்பூண்டி, கட்டிமேடு, ஆதிரெங்கம், திருமக்கோட்டை, பழையகோட்டை, பாபாஜிக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, எலவனூர், பேரளம், உபயவேதந்தபுரம், கொல்லபுரம், பூங்காவூர், நெடுஞ்சேரி, ஆதம்பார், திருவிழிமிழலை, பனகல் தெரு. சாலை, குமாரகோவில் தெரு.
ஈரோடு:
காசிபாளையம், சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரிச்சேனிமலைவீதி, கீரமடை, SKC நகர், ஜெகநாதபுரம் காலனி, உலவநகர், மாரப்பன் வீதி, ரயில் நகர், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.

























