தமிழகத்தில் மே, ஜூன் மாத மின் கட்டணம் வசூல் – TNEB க்கு கோரிக்கை!!
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் முந்தைய மாத மின்கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்று வேண்டுகோள் தற்போது விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மின் ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணம் வசூல்:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனாவின் இரண்டாம் அலை பரவி வருகிறது. இதனை அடுத்து மாநில அரசு பல வித கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இப்படியாக இருக்க, மக்களின் மின்கட்டண வசூல் தொடர்பாக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தற்போது மின்வாரிய தலைவருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது.
இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
அதில் பல வித கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக கூறப்பட்டதாவது, மின்வாரிய ஊழியர்கள், மின் கணக்கீடு ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் முன்னுரிமையின் அடிப்படையில் முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட வேண்டும். அதே போல் மின் கணக்கீடு செய்வதில் கொரோனா பொது முடக்கம் காரணமாக சிக்கல் ஏற்பட இருப்பதால் மே மற்றும் ஜூன் மாதங்களில் முந்தய மாதங்களின் கட்டணத்தையே வசூல் செய்ய வேண்டும்.
TN Job “FB Group” Join Now
மின்வாரிய பணியாளர்களையும் முன்கள பணியாளர்கள் என்று அறிவித்து அவர்களுக்கு தமிழக அரசு உரிய சலுகைகளை வழங்க வேண்டும். 50 சதவீத ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறாக பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.