TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்றுனர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வை நடத்தியது. மேலும் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பை தற்போது TRB வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் வினாத்தாள் மற்றும் தாங்கள் அளித்த விடைகளை trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியாகிய நிலையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டு உள்ளது.
முக்கிய அறிவிப்பு:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தின் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். இந்த வகையில் 2020 – 2021 ஆம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 / கணினி பயிற்றுநர் நிலை – 1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் செப்டம்பர் 9, 2021 அன்று வெளியிடப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
மேலும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்கிடையில் கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் ஜனவரி இறுதி வாரத்தில் தாக்கம் குறைந்ததால் அமலில் இருந்த ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு பிப்ரவரி 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை, கணினி பயிற்றுநர் நிலை-1க்கான தேர்வுகள் இணைய வழியாக கணினிகள் மூலம் நடைபெற்றது. இந்த தேர்வுகள் காலை 9 மணி பிற்பகல் 2 மணி வரை, காலை மற்றும் மாலை இரு வேளைகளில் நடைபெற்றது. இந்த தேர்வை 2.13 லட்சம் பேர் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள், வினாத்தாள், பதில் அளித்த விடைகளை, வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதையடுத்து கேள்விகளுக்கு உரிய, தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள், அனைத்து பாடங்களுக்கும், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. அதன் மீது ஆட்சேபனைகள் இருந்தால், இணையதளம் வழியாக, உரிய ஆதாரங்களுடன் வரும் 13ம் தேதி வரை தெரிவிக்கலாம். மேலும் தபால் அல்லது பிற வழி முறையீடுகள் ஏற்கப்படாது. பாட வல்லுனர்களின் முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.