மத்திய அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
முந்தைய காலத்தில் ஓய்வூதியம் பெறுபவர் விவாகரத்துப் பெற்றிருந்தாலோ அல்லது கணவரை இழந்து இருந்தால் மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும். தற்போது அரசு ஊழியரின் மகள் விவாகரத்துப் பெற்றிருந்தாலும் அவர்களின் குடும்பத்திற்கு ஓய்வுதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு பென்ஷன்:
மத்திய அரசு அவ்வப்போது அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதாவது அரசு ஊழியர்களுக்கு பணி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் மட்டுமே சம்பள உயர்வு 28 சதவீதமாக இருந்து அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக இருந்தது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி, மாநில அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் பென்சன் என அடுத்தடுத்து மூன்று முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
மத்திய அரசின் IPRCL நிறுவனத்தில் வேலை – ஆரம்ப ஊதியம் ரூ 60,000..
அதாவது மத்திய அரசு ஊழியரின் மகள் விவாகரத்து பெற்று இருந்தால் அல்லது விதவையாக இருந்தால் அவர்களுக்கும் பென்ஷன் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. குடும்ப ஓய்வூதியத்திற்கு இணைக்கப்பட்ட நாமினி பெயரில் ஓய்வூதியத்தில் மகள் விவாகரத்து பெற்று ஓய்வூதியர் உயிரோடு இருக்கும்போது அந்த விவாகரத்துக்கு விண்ணப்பிக்க பட்டிருந்தால் அந்த மகள் ஓய்வூதியம் பெற தகுதியானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் ஒரு சில நகரங்களில் முழு ஊரடங்கு அமல் – வன்முறை எதிரொலி!
முந்தைய காலத்தில் ஓய்வூதியம் பெறும் நபர் உயிரோடு இருக்கும்போது விவாகரத்துப் பெற்றிருந்தாலும் அல்லது கணவரை இழந்து இருந்தாலும் மட்டுமே ஓய்வூதியம் பெற முடியும். ஆனால் தற்போது விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார் ஓய்வூதியத்தை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு ஊழியரின் மகள் விவாகரத்து பெற்றிருந்தாலோ அல்லது கணவரை இழந்து இருந்தாலும் அவர்களுக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை ஏப்ரல் 7ஆம் தேதி வெளியானது.