தமிழகத்தில் TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டு TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போது வரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அதனை தொடர்ந்து இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தகுதித்தேர்வு நடத்தபட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
TET ஆசிரியர் தகுதித் தேர்வு
தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு மத்திய, மாநில அரசுகள் மூலமாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலமாக சான்றிதழை பெற முடியும். அத்துடன் இந்த சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன் பின் மறுபடியும் தேர்வு எழுத வேண்டும் அல்லது மறுமதிப்பீட்டு முறை மூலமாக சான்றிதழை மேலும் சிறிது காலத்திற்கு நீட்டித்து கொள்ளலாம். கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர்.
ஜனவரி 15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – இன்று முதல் அமல்!
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு நியமன தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டில் கூறப்பட்டது. ஆனால் இந்த ஆண்டில் தமிழக அரசு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் அதாவது தேர்ச்சி மூப்பு அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் என்று அறிக்கை கூறப்பட்டிருந்தது. மேலும் தேர்ச்சி பெற்றவர்கள் எதன் அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் என்றும் நியமனத்தேர்வு குறித்த பாடத்திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியிடுமாறு கோரிக்கைகள் எழுந்தன.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் மூடல்? ஓமைக்ரான் தொற்று பரவல் எதிரொலி!
இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 20.07.2018 – ன் படி போட்டித் தேர்வின் மூலம் தேர்வு பணி மேற்கொள்ளப்படும். இது குறித்த அறிக்கைகள் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என்று மொபைல் மூலமாக இந்த செய்தியை தெரிவித்தார். அத்துடன் இதற்கான விண்ணப்பத்தை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதனால் 8 ஆண்டுகளாக அரசு பணிக்கு காத்திருந்த 60 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.