தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு – 3,312 பேர் பணியிடமாற்றம்!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிடமாறுதல்களுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் நடைபெற்றது. இதன் வாயிலாக சுமார் 3,312 பேர் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர்.
பணியிட மாறுதல்:
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த 8ம் தேதி பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடங்கியது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பணியிடமாறுதல் கலந்தாய்வு வழக்கம் போல நடைபெற்றது.
அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா? இதோ இன்றைய அப்டேட்!
இதன் வாயிலாக சுமார் 424 அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், 1,111 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் 1,777 இடைநிலை ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 3,312 பேர் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர். பணியிட மாறுதல்களுக்கு பிறகு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தற்போது தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.