தமிழகத்தில் விதிகளை மீறி செயல்படும் மதுக்கடைகள் – புகார் அளிக்க மக்களுக்கு அனுமதி!
தமிழகத்தில் அரசின் விதிகளை மீறி அமைக்கப்பட்டு நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளை மூட கோரி பொதுமக்கள் முறையிடலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மதுக்கடைகள்:
தமிழகத்தில் உடல் நல கோளாறு, சாலை விபத்து உள்ளிட்டவைகளுக்கு மூல காரணமாக உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் சுமார் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று அமைச்சரவையில் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது மதுக்கடைகளை மூடுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து வரும் நல்ல செய்தி.. உயரும் சம்பளம் – வெளியான சூப்பர் அப்டேட்!
அந்த வகையில் முதற்கட்டமாக சென்னையில் மட்டும் 20 மதுக்கடைகளும் காஞ்சிபுரத்தில் 25- க்கும் மேற்பட்ட மது கடைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசின் அனுமதி இல்லாமலும், விதிகளை மீறியும் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை மூட பொதுமக்கள் கோரிக்கை வைக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. உங்கள் பகுதிகளில் அரசின் விதிகள் மற்றும் நிபந்தனைகளை மீறி நடத்தப்படும் மதுக்கடைகளை முழுவதுமாக அகற்ற கோரி அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் முறையிடலாம் என அரசு தெரிவித்துள்ளது.