தமிழகத்தில் ஜூலை 31 வரை மட்டுமே ஸ்டெர்லைட் திறப்பு – உச்ச நீதிமன்றம் அனுமதி!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து ஜூலை 31 ஆம் தேதி வரை மட்டுமே ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்றம் அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது மூலமாக கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படலாம் என அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 15 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. மேலும் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிலைமையை சரி செய்ய, ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலைகளை திறக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. இந்நிலையில் 4 மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் 300 மருத்துவ பணியாளர்கள் தேர்வு – நாளை முதல் தொடக்கம்!!
இது குறித்து உச்ச நீதிமன்றத்திடம் மனு தாக்கல் செய்யப்பட்டது. நிலைமை மோசமாக உள்ளதால் ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரை மட்டுமே ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் செயல்பட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.