தமிழகத்தில் 300 மருத்துவ பணியாளர்கள் தேர்வு – நாளை முதல் தொடக்கம்!!
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக அரசு மருத்துவமனைகளில் புதிதாக ஒப்பந்தம் அடிப்படையில் 150 மருத்துவர்கள், 150 செவிலியர்கள் தேர்வு செய்ய நாளை முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ரிப்பன் மாளிகையில் நேர்முக தேர்வு நடைபெறுகிறது.
மருத்துவ பணியாளர்கள்:
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகளவில் பரவி வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வார இறுதி நாட்களில் கொரோனா அதிகமாக பரவ வாய்ப்புள்ளதால் ஞாயிறு முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
சனிக்கிழமைகளில் இறைச்சி, மீன் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்திற்கு அதிகமாக உள்ளதால் மருத்துவமனைகளில் இட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சில மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மக்கள் இறந்துள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் கூடுதல் இடங்களை உருவாக்கி அதில் ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களை நிரப்ப வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் – வானிலை மையம் அறிக்கை!!
இதற்கான நேர்முக தேர்வுகள் நாளை முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி ரிப்பன் மாளிகையில் நடைபெற உள்ளது. அதில் ஒப்பந்த அடிப்படை பணியாளர்களில் 150 மருத்துவர்கள், 150 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் கொரோனா பரவலில் கூடுதல் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.