தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் – வானிலை மையம் அறிக்கை!!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இலேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் தாக்கமும் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிக்கை:
தமிழகத்தில் கோடை காலம் காரணமாக வெயில் தாக்கம் சற்று அதிகமாக இருக்கிறது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் அதிகம் வெளியில் வராமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இருந்த போதிலும் மாலை வேளைகளில் இலேசான மழை பெய்து வருகிறது.
இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழக கடலோர பகுதியை ஒட்டிய வங்கக்கடலில் நிலவும் (1.5 முதல் 3.6 கிலோமீட்டர் உயரம் வரை) வளிமண்டல சுழற்சி காரணமாகவும் மற்றும் கர்நாடகாவிலிருந்து தென் கேரளா வரை நிலவும் (1.0 கிலோமீட்டர் உயரம் வரை) வளிமண்டல சுழற்சி காரணமாகவும், மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
28.04.2021:
மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
29.04.2021 முதல் 02.05.2021 வரை: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
தனியார் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மே 1 முதல் அமல்!!
வெப்பநிலை முன்னறிவிப்பு:
தமிழக உள் மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவாக மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக தலா 2 செ.மீ மழை பெய்துள்ளது.