தமிழகத்தில் பொதுத்தேர்வு – தனித்தேர்வர்களுக்கு எப்படி ????

0
தமிழகத்தில் பொதுத்தேர்வு - தனித்தேர்வர்களுக்கு எப்படி
தமிழகத்தில் பொதுத்தேர்வு - தனித்தேர்வர்களுக்கு எப்படி

தமிழகத்தில் பொதுத்தேர்வு – தனித்தேர்வர்களுக்கு எப்படி ????

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது.

இதனால் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு, பொதுத்தேர்வு, செமஸ்டர் தேர்வு என அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டும், ஒரு சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் அறிவிப்புகள் வெளியாகியது. ஆயினும் வரும் காலங்களில் தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதால், மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுகள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதாவது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வினை ரத்து செய்வதாக அரசு அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளது.மேலும் மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்கள் மூலமாகவும், வருகை பதிவேட்டின் மூலமாகவும் தேர்ச்சி வழங்கப்பட இருக்கிறது.

ஆனால் தனித்தேர்வர்களுக்கும் பழைய பாடத்திட்டத்தில் தோல்வியடைந்தவர்களுக்கும் தேர்வு நடத்தப்படுவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எனினும் அவர்களுக்கு தேர்வானது நடத்தப்படும் என்றும், அதற்கான அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரி தெரிவித்து உள்ளார்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!