தமிழகத்தில் மாணவர்களின்றி இயங்கும் பள்ளிகள் – வெறிச்சோடிய வகுப்பறைகள்!!
தமிழக பள்ளிகளில் +2 மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பள்ளிகளில் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வகுப்பறைகளும் மூடப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்களும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. அப்போதிலிருந்து இன்று வரை முழுமையாக பள்ளிகளோ, கல்லூரிகளோ திறக்கப்படவில்லை. இடையில் கொரோனா தொற்று குறைந்து வந்ததை தொடர்ந்து ஜனவரி மாதம் முதல் மீண்டுமாக பள்ளிகள் திறக்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
இருந்தாலும் 9 முதல் 12 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் மீண்டுமாக கொரோனா பரவலின் இரண்டாம் அலை தாக்க துவங்கியது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மீண்டுமாக மூடப்பட்டது. +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக செய்முறை தேர்வுகள் துவங்கி நடைபெற்று முடிந்தது. பின்பாக மாணவர்கள் யாரும் பள்ளிகளுக்கு வர வேண்டாம் எனவும், பொதுத்தேர்வுகள் எழுதும் நாட்களில் மட்டுமே பள்ளிக்கு வந்தால் போதும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மே 7 முதல் உச்ச நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை – தலைமை நீதிபதி அறிவிப்பு!!
இதன் காரணமாக எப்போதும் மாணவ, மாணவியருடன் நிறைவாக காணப்படும் பள்ளிகள் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. எப்போதும் சத்தத்துடன் காணப்படும் பள்ளி வளாகங்கள் மூடப்பட்டுள்ளது. மாணவர்கள் இன்றி பள்ளிகள் களையிழந்து காணப்படுகிறது. இந்த நிலை சீக்கிரமாக மாற வேண்டும் என ஆசிரியர்களும் மாணவர்களும் சமூக வலைதளங்களிலும், வாட்ஸ் -ஆப் குழுக்களிலும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.