மே 7 முதல் உச்ச நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை – தலைமை நீதிபதி அறிவிப்பு!!
இந்தியா முழுவதும் பெருகி வரும் கொரோனா பரவல் காரணமாக மே மாதம் 7ஆம் தேதி முதல் ஜூன் 28 ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை:
நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தாக்கம் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய்த்தொற்றினால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தினமும் பத்தாயிரத்துக்கும் மேலாக புதிய பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் அந்தந்த மாநிலங்களில் கட்டுப்பாட்டு நடைமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
TN Job “FB Group” Join Now
குறிப்பாக மக்கள் கூடும் இடங்களாகிய கடற்கரை, சுற்றுலா, மதவழிபாட்டு தலங்கள், பொதுப்போக்குவரத்து போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணிக்கு அமர்த்தப்பட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இக்ஃனோ பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – துணைவேந்தர் வெளியீடு!!
இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக உச்சநீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கத்துக்கு முன்னனதாக ஒரு வாரம் முன்கூட்டியே கோடை விடுமுறை துவங்குகிறது. அதன்படி மே 7 ஆம் தேதி முதல் ஜூன் 28 ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தவிர இந்த விடுமுறை நாட்களில் கொரோனா சிகிச்சைக்காக உச்சநீதிமன்ற வளாகத்தை பயன்படுத்துமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.