தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை – ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்!!

0
தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை - ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்!!
தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை - ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்!!
தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை – ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்!!

தமிழகத்தில் ஆல்பாஸ் அறிவிக்கப்பட்ட 9, 10 மற்றும் 11ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் தற்போது வேகம் எடுக்க தொடங்கி உள்ள நிலையில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாத மத்தியில் மூடப்பட்ட பள்ளிகள் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு பின்னர் ஜனவரியில் மீண்டும் செயல்பட தொடங்கின. நோய்த்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தற்போது 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்தார்.

தமிழக அரசு தட்டச்சர் பணி பதவி உயர்வு – புதிய விதிகள் அமல்!!

இருப்பினும் அவர்களின் கற்றல் திறனை கருத்தில் கொண்டு நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறினார். இதன்படி வாரத்தில் 6 நாட்களுக்கும் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் வெளியிட்ட அறிக்கையில், தற்போது மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு பருவ தேர்வுகள் மூலம் மதிப்பீடு – பள்ளிக் கல்வித்துறை திட்டம்!!

மேலும் சில மாவட்டங்களில் ஒரு சில பள்ளி மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி சட்டமன்ற தேர்தலை ஒட்டி ஆசிரியர்களுக்கு வரும் வாரத்தில் இருந்து அதற்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதனால் மாணவர்களுக்கு தொற்று பரவாமல் பாதுகாக்க ஆசிரியர்களால் முழுவதுமாக பள்ளிகள் பணிபுரிய இயலாது.

TN Job “FB  Group” Join Now

எனவே பொதுத்தேர்வு நடைபெற உள்ள 12ம் வகுப்பு மாணவர்களை தவிர்த்து 9 முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் நலன் கருதி, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளிக்கல்வி இயக்குனருக்கு கோரிக்கை கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!